கடல் உணவுகள் அனைத்துமே உடலுக்கு அதிக சத்துக்களை வழங்க கூடியது. மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகளில் அவ்வளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. தற்போது மீனை வைத்து சுவையான ரெசிபி ஒன்றை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சங்கரா மீன் – 1/2 கி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 15
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – சிறிதளவு
எண்ணெய்
பச்சைமிளகாய் – 4
கருவேப்பில்லை – சிறிது
செய்முறை
மீனை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் போன்றவற்றை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும். இதனை மிக்ஸியில் நைசாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன் பிறகு இஞ்சி மற்றும் பூண்டை தனியாக அரைத்து எடுத்த்து கொள்ளவும், இப்பொழுது மீனில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கலந்துகொள்ளவும். அதன் பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். ஏற்கனவே மீனில் நீர் இருப்பதால் மசாலா நன்கு ஒட்டிக்கொள்ளும். இப்பொழுது அதில் சிறிதளவும் சோளமாவை சேர்த்து கொள்ளவும்.
இதனை 1 மணி நேரம் வரை ஊற வைத்து விட்டு தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி போடவும் அதனுடன் கருவேப்பிலையையும் சேர்க்கவும். இதனிடையே ஊறவைத்துள்ள மீனை சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் இறக்கி பரிமாறினால் சுவையான மீன் வறுவல் தயார்.