தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது திருமணத்திற்கு பச்சை கொடி காட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அதற்கான காரணமும் வைரலாகி வருகிறது.
நயன்தாரா விக்னேஷ் சிவன்
தமிழ் திரையுலகில் பல கஷ்டங்களை தாண்டி ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. தனது விடா முயற்சியால் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். இவர் நடித்த பல படங்கள் ஹிட் கொடுக்கவே இவரின் சம்பளமும் எகிறி வருகிறது. எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு விட்டார் நம்ம நயன்தாரா.
இவருக்கு எப்பொழுது திருமணம் ஆகும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளார். இவரும் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். எங்கு சென்றாலும் ஒன்றாக வருவது, ஒன்றாக செல்வது என இணையத்தளத்தையே அமர்க்களம் செய்து வருகின்றனர்.
இன்னும் தனது இலக்கை அடைந்த உடன் தான் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் நயன்தாரா. இரு வீட்டாரும் திருமணத்திற்கு வற்புறுத்தியும் நயன்தாரா கேட்பதாக இல்லையாம். இந்நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது நயன்தாராவின் அப்பா உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் தான் கடந்த மாதம் சென்று பார்த்து வந்தாராம். அவர் அப்பாவின் ஆசை நயன்தாராவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தானாம். ஆனால் நயன்தாரா அதற்கு ஒத்துக்கொள்ள வில்லையாம். அதன் அவரின் வற்புறுத்தலின் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.