விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மௌனராகம்
லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நடைபெறாததால் சில சீரியல்கள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தளர்வுகள் போடப்பட்ட காரணத்தால் ஷூட்டிங் மீண்டும் தொடங்கி புதிய அத்தியாயத்துடன் சீரியல்கள் தொடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனால் விஜய் டிவியில் மௌன ராகம் சீரியல் தற்போது வரை ஒளிபரப்பாகாமல் இருந்து வருகிறது. இந்த சீரியல் எப்பொழுது ஆரம்பிக்கும் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது இணையத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சக்தி, வருண் மணக்கோலத்தில் இருப்பது போலவும் கார்த்திக், ஸ்ருதி என அனைவரும் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சக்தி, வருண் திருமணம் எப்படி நடக்க போகிறது என்ற ஆர்வத்தில் இருந்த நமக்கு திடீரென போடப்பட்ட லாக்டவுனால் இந்த சீரியல் அந்த சஸ்பென்ஸ் உடனே நிறுத்தப்பட்டது. தற்போது இந்த சீரியல் கூடிய விரைவில் தொடங்க இருப்பது நினைத்து பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.