அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா.. திணறும் உலக நாடுகள்!!

0

உலக நாடுகளில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸினால் ஏற்படும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இரண்டாம் அலை தீவிரமாக பரவியதற்கு காரணம் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா. இது தவிர உலக சுகாதார மையமும் மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைளிலேயே உருமாறிய டெல்டா வகை கொரோனாதான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவை பாடாய் படுத்திய பிறகு தற்போது உலக நாடுகளின் பக்கம் இந்த வைரஸின் பார்வை திரும்பியுள்ளது.

 

சமீபத்தில் பங்களாதேஷ் அரசு அந்நாட்டில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் ஜூன் 28 முதல் கடுமையான ஊரடங்கை அறிவித்துள்ளது. அதே போல மலேசிய அரசு தொற்று எண்ணிக்கை 4000க்குள் வரும் வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் மட்டும் டெல்டா வகை கொரோனவால் 150 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.

இது போதாதென்று மேலும் இந்த டெல்டா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் என மாறியுள்ளது. இந்த டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவின் பல மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலையே முழுதாக ஓயாத இந்த தருணத்தில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here