‘காதலுக்கு கண் இல்லை…அனைவரையும் நேசியுங்கள்’…! வரலட்சுமியின் பிரைட் மாத கொண்டாட்ட பதிவு !!!

0

நடிகை வரலட்சுமி சரத்குமார் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். நாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். இந்நிலையில்  தற்போது அவர் பிரைட் மாதம் குறித்து ஒரு அழகிய பதிவை வெளியிட்டு உள்ளார்.

சிம்பு நடிப்பில் வித்தியாசமான கதை அமைப்பில் உருவான படம் ‘போடா போடி’, இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதை தொடர்ந்து பல படங்கள் இவரின் நடிப்பிற்கு சான்று. மேலும் இவரின் நடனம் , வசனம் என அனைத்திலும் வல்லவர். நாயகியாக மட்டும் இல்லாமல் சர்க்கார் படத்தில் ஒரு சிறந்த வில்லியாகவும் நடித்திருப்பார். மேலும் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தனது திறமையை காட்டி உள்ளார். பல டிவி நிகழ்ச்சிகளும் பங்கேற்று உள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கியூட் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரைட் மாதத்தை கொண்டாடும் வகையில் சில பதிவுகளை அவர் வெளியிட்டு சில புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். அந்த பதிவில் ‘காதலுக்கு கண் இல்லை.. நம்மை நாமே நேசிப்போம்.. நம்மை சுற்றியுள்ள அனைவரையும் நேசிக்கவும்.. அன்பை பரப்புங்கள்’ என அன்பை பற்றி அழகான பதிவை பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here