லாக்டவுன் காரணமாக சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி ரசிகர்களுக்கு குஷியளித்துள்ளது. தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸாக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சன் டிவி சீரியல்
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தினால் மீண்டும் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. அதுவும் முதல் அலையை விட இந்த இரண்டாவது அலை மிக மோசமாகவே காணப்பட்டது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.
இதனால் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மேலும் மக்கள் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவுமே ஒளிபரப்பாகவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது இல்லத்தரசிகள் தான். ஆரம்பத்தில் காட்சிகள் தட்டுப்பாட்டால் திங்கள் முதல் வியாழன் வரையில் தான் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளதால் பழையபடி சீரியல்கள் அனைத்தும் வழக்கம் போல ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான் சன் டிவி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இனி வாரம் தோறும் சனி கிழமைகளிலும் சன் டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்