கொரோனா தொற்று 2019ம் ஆண்டின் இறுதியில் தொடங்கி இன்று வரை ஓய்ந்த பாடில்லை.மேலும் இது இயற்கையாக தோன்றிய வைரஸா அல்லது ஆய்வகத்தில் உருவானதா?? அதன் பிறப்பிடம் எது என்ற பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இந்நிலையில் சீன விஞ்ஞானிகள் இது அமெரிக்காவில் இருந்து பரவியது என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
கொரோனா
சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் பரவிக்கொண்டு தான் உள்ளது. தற்போது அது இரண்டாவது அலையாக உருவெடுத்து நாட்டு மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் சீன தோல் நோய் நிபுணர் செங் குவாங் அவர்கள் அமெரிக்காவில் உள்ள முக்கிய ஐந்து மாகாணங்களில் ஏழு பேர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பே கொரோனா தொற்றுக்கு ஆளாகிருந்தனர் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்த ஆராய்ச்சியானது அமெரிக்க தேசிய சுகாதார இன்ஸ்டியூட்டில் நடந்த போது அதில் இவர் பங்கேற்று உள்ளார். தற்போது இதன் அதிகாரப்பூர்வமாக முடிவுகள் வெளியேறியதை அடுத்து இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சோ லீஜியான் ,செங் குவாங் அளித்த ஆராய்ச்சி அறிக்கைப்படி, கொரோனா வைரஸ் பரவலுக்கு உலகின் பல நாடுகளில் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் ரஷ்ய தடுப்பூசி – ரெட்டீஸ் நிறுவனம் தகவல் !!!
இதற்கு சீனா மட்டுமே காரணம் என்று கூறக்கூடாது என்றுள்ளார். மேலும் 2019-ம் ஆண்டின் இடையிலேயே அமெரிக்காவில் இந்த தொற்றானது இருந்த நிலையில் , கொரோனா உருவாக காரணம் பலவகை இருக்கலாம் அதனை கண்டறிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் இந்த வைரஸ் வவ்வால் இறகு சாம்பிள் மூலமாக பரவியதா அல்லது வேறு ஏதாவது விலங்கின் கழிவிலிருந்து பரவியது என்று தெரியாத நிலையில் ,இது குறித்து உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் ஆராய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சர்ச்சை கருத்து கொரோனா வைரஸ் பரவலை கண்டறியும் பணியில் உள்ள விஞ்ஞானிகள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்