மஹாராஷ்டிரா மாநிலம் தான் இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அங்கு தான் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் கொரோனா:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 4,483 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டும், 507 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 223 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்திய அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மும்பையும் ஒன்று. இந்நிலையில் அங்குள்ள பத்திரிக்கையாளர்களுக்கு எந்தவித அறிகுறியும் இன்றி கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் இருந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் என 171 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 53 பேருக்கு எந்தவித அறிகுறியும் இன்றி கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |