50% அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும் – தமிழக அரசு அதிரடி!!

0

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக தமிழக அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் மிக கொடூரமாக இருந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வீசிய முதல் அலையை விட தற்போது வீசும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை(மே 6)ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது. அதில் மளிகை, காய்கறி கடைகள் போன்றவற்றை மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்களுடன் இயங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்று அதிகரித்தால் மே 12ம் தேதி முதல் முழு ஊரடங்கு – மாநில முதல்வர் அதிரடி!!

அதன்படி அரசு ஊழியர்கள் 50% மட்டும் சுழற்சி முறையில் பணிக்கு வர அரசு உத்தரவிட்டுள்ளது. குரூப் ஏ பிரிவு அரசு அதிகாரிகள் அனைவரும் தினமும் பணிக்கு வர வேண்டும் என்றும் மற்ற அதிகாரிகள் சுழற்சி முறையில் பணிக்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here