கொரோனா தொற்று அதிகரித்தால் மே 12ம் தேதி முதல் முழு ஊரடங்கு – மாநில முதல்வர் அதிரடி!!

0

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது இதனை தடுப்பது குறித்து கர்நாடக முதல்வர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

முழு ஊரடங்கு:

இந்தியாவில் கடந்த 15 நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்றினால் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து 3 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் நாட்டில் அனைத்து மாநிலத்திலும் பல வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மக்களிடையே அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது அந்த மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி வருகிறது. ஏற்கனவே அங்கு பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் இருந்தும் கொரோனா தொற்று வேகமெடுப்பதால் இதனை தடுப்பது குறித்து மாநில முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பயனற்ற ஊரடங்கு எதற்கு?? பதிலளிக்க மத்திய, மாநில அரசுக்கு ஆணை!!

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் கூறியதாவது, மாநிலத்தில் இதேபோல் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தால் மே 12ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவலினால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here