தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் இந்த புகைப்படத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
சிம்ரன்
பஞ்சாபி பெண்ணான சிம்ரன் தமிழில் விஐபி என்ற படத்தின் மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டார். முதல் படத்திலேயே இவருக்கு ஏக வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து மக்களின் நாயகி என்றும் பெயர் வாங்கினார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தெந்தியாவையே கலக்கி வந்தார்.
சிம்ரனை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி என்றும் பெயர் வாங்கியவர். இப்படி இருக்க தற்போது அவர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பல பிரபலங்கள் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில் சிம்ரனும் போட்டுகொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றுக்கு நாள்தோறும் நாட்டில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் 3 லட்சத்துக்கு மேலாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையிலேயே பல பிரபலங்கள் தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள அரசும் பல கட்டுப்பட்டு விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது.