சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐ.பி.எல் 2020 தொடரில் நன்றாக விளையாடவில்லை என்ற காரணத்திற்காக அவரது ஐந்து வயது மகளான ஜியாவிற்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஐ.பி.எல் தொடர்:
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) தற்போது துபாய், ஷார்ஜா போன்ற நகரங்களில் நடந்து வருகின்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக தோல்வியினை சந்தித்து வருகின்றது. நடந்து முடிந்த 6 போட்டிகளில் தற்போது வரை வெறும் 2 போட்டிகளில் மட்டும் தான் வெற்றி அடைந்துள்ளது. இதனால், சென்னை சூப்பர் அணியின் ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சரியாக விளையாடவில்லை என்ற குற்றசாட்டு தொடர்ச்சியாக எழுந்து வந்தது. இத்தனைக்கும் அனைத்து வீரர்களும் திறமையாக விளையாடக் கூடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள். தொடர்ச்சியாக தோல்வி அடைந்தததால் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு பக்கம் இருக்க சிலர் கேப்டன் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் உற்சாகமும் அளித்து வருகின்றனர்.
பாலியல் மிரட்டல்:
ஆனால், சிலர் காமுகர்கள் தோனியின் 5 வயது மகளான ஜிவாவிற்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளனர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தோனி போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற காரணத்திற்காக அவரது 5 வயதான மகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது கற்பனையில் கூட யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். தோனி ரசிகர்கள் இதனை பார்த்துவிட்டு கொந்தளிப்பில் உள்ளனர்.
பட்டியலின ஊராட்சி மன்ற தலைவியை தரையில் அமர வைத்து கூட்டம் – கடலூரில் அவலம்!!
இந்த பதிவினை செய்த mr.vijay_47 என்ற சமூகவலைத்தள ஐடி கொண்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.