டிக் டாக் மூலம் பிரபலமான ஜி .பி. முத்து குடும்ப கஷ்டம் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிலர் சூர்யா மீது கொண்ட ஒருதலை காதலால் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறுகின்றனர். தற்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜி .பி. முத்து
டிக் டாக் நமது ஊரில் பல திறமைசாலிகளை வெளியில் கொண்டு வந்தது என்று கூறலாம். அதில் ஒருவர் தான் ஜி.பி.முத்து. இவரது காமெடியான தமிழ் உச்சரிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். டிக்டாக் மூலம் பலருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. இந்த டிக்டாக்கிற்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி இருந்தனர். மேலும் சிலர் ஆபாசமாக வீடீயோக்களை எடுத்தும் பதிவிட்டனர்.
லடாக்கில் நடந்த எல்லைப் பிரச்சனைகள் காரணமாக சீன பொருட்களை இந்தியாவில் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனால் டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதனால் டிக்டாக் பிரபலங்கள் என்ன செய்வதென்று புரியாமல் மாற்று வழியை தேடி வருகின்றனர்.
முத்துவின் பேச்சுக்காகவே இவரது டிக் டாக் வீடீயோக்கள் பிரபலமடைந்தது. மேலும் இவரின் வீடியோவால் போலீஸ் விசாரணை வரைக்கும் சென்றுள்ளார். இவரும் சூர்யாவும் சேர்ந்து டிக் டாக்கில் பல காதல் வீடீயோக்களை வெளியிட்டிருந்தனர். இதனால் பலரும் அவர்களை திட்டி தீர்த்தனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. டிக் டாக் தடையால் மிகவும் மனமுடைந்து போன ஜி.பி முத்து, பிரதமர் மோடிக்கு டிக் டாக் செயலியை மறுபடியும் கொண்டுவர கோரி வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் அவர் தற்கொலைக்கு முயற்சித்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலர் இதற்கு சூர்யாவை ஒரு தலையாக காதலிப்பதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுவதால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறுகின்றனர். மேலும் பலர் குடும்ப கஷ்டம் மற்றும் தீராத வயிற்று வலி காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறுகின்றனர்.