இந்தியாவின் பாதி பகுதிகளில் கொரோனாவின் காலடித்தடமே படவில்லை – ஆறுதல் அளிக்கும் தகவல்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டு உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 17,357 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 560 பேர் உயிரிழந்தும், 2859 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டும் உள்ளனர். இந்நிலையில் நாட்டில் உள்ள பாதி மாவட்டங்களில் கொரோனா வைரஸால் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.

46 சதவீத மாவட்டங்கள்:

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 736 மாவட்டங்கள் உள்ளன. இதில் ஏப்ரல் 15ம் தேதி வரை உள்ள தரவுகளில் 325 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அதாவது நாட்டில் உள்ள 46 சதவீத மாவட்டங்களில் கொரோனா வைரஸின் காலடித்தடமே இல்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 18 மாவட்டங்கள் தான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்றவை அரசுக்கு எளிமையாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள 411 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உள்ளது. இதில் மும்பை (மகாராஷ்டிரம்), இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ஹைதராபாத் (தெலங்கானம்), கொர்பா (சட்டீஸ்கர்), ராஞ்சி (ஜார்க்கண்ட்) மற்றும் குர்தா (ஒடிசா) ஆகிய மாவட்டங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here