விஜயகாந்துக்கு டை அடித்து சவரம் செய்த மனைவி – வைரலாகும் வீடியோ.!

0

கொரோனாவால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பிரபல நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். விஜயகாந்த், தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று 2 நிமிடம் 20 நொடிகள் ஓடும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் காந்த்

விஜய் காந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் நான் எனது இல்லத்தில்” என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், அவரது மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா, விஜயகாந்துக்கு முகசவரம் செய்து அழகுபடுத்துகிறார்.

பின்னர், தலைக்கு ‘டை’ அடித்து முடியை கருமையாக்கிய பிறகு, கை மற்றும் கால் நகங்களை வெட்டி சரிசெய்கிறார். பிறகு, காலில் ஏற்பட்ட பழைய காயத்தின் தழும்புகளை காட்டி, “இது சினிமாவில் சண்டை காட்சியின்போது ஏற்பட்ட வீரத் தழும்புகள். ஒவ்வொரு தழும்புக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது” என்று பிரேமலதா விளக்கம் கூறுகிறார். வீடியோவில் விஜயகாந்த் உற்சாகமாக காட்சி தருகிறார். இந்தப் பதிவை டுவிட்டரில் பார்த்த விஜயகாந்தின் ரசிகர்களும், தே.மு.தி.க. தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here