கர்நாடகா மாநிலத்தில் தனது வயலில் வேறொருவரின் பசு மாடுகள் மேய்ந்த காரணத்திற்காக, நிலத்தின் உரிமையாளர் பலாப்பழத்தில் வெடி வைத்து அந்த பசுக்களுக்கு கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பசு மாடுகள் கொலை:
கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிவைத்து கொடுத்ததில் கர்ப்பிணி யானை இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது கர்நாடகாவில் இதைப் போன்றே கொடூர சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது. அம்மாநிலத்தின் சிக்மகலூர் மாவட்டத்தில் பசரவள்ளி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டே கவுடா என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இவரின் 3 பசு மாடுகள், அந்தப் பகுதியில் உள்ள மஞ்சுநாத் என்பவரின் வயலில் அடிக்கடி மேய்வதால், இருவருக்கும் இடையில் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வயலில் மேய்ந்து கொண்டிருந்த 3 பசுக்கள் தீடிரென மயங்கி விழுந்து உள்ளது. அது குறித்து தகவல் அறிந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பலாப்பழத்தில் வெடி மருந்து வைத்துக் கொடுத்து பசுக்கள் கொல்லப்பட்டதை கண்டறிந்தனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து – மாநில அரசு முடிவு..!
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடகா போலீசார் மஞ்சுநாத்தை தேடி வருகின்றனர். தொடர்ச்சியாக விலங்குகளுக்கு நடைபெற்று வரும் கொடூர சம்பவங்கள் நம் நாட்டில் அவற்றின் பாதுகாப்பு இன்மை மற்றும் இரக்கமற்ற மனிதர்களின் சுயரூபத்தை காட்டுவதாகவும் உள்ளது.