Friday, May 3, 2024

பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் நீளமான “அடல்” சுரங்கப்பாதை- 3 நாளில் அடுத்தடுத்து விபத்து!!

Must Read

உலகின் மிக நீளமான சுரங்கபாதையான “அடல்” சுரங்கப்பாதை திறந்து வைக்கப்பட்ட 3 நாட்களுக்குள் 3 விபத்துகள் நடந்துள்ளதாக தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். இது வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் நீளமான சுரங்கப்பாதை:

இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் இருந்து லடாக்கின் லே பகுதியை இணைக்கும் அடல் ரோடங் சுரங்கப்பாதை 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான உழைப்பால் அமைக்கப்பட்டுள்ளது. மணாலி பகுதியில் இருந்து லே பகுதிக்கு செல்லும் இந்த சுரங்கவழி பாதை 46 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை 3,300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவில் கட்டப்பட்டதால் இந்த சுரங்கப்பாதைக்கு “அடல்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Atal Tunnel - Wikipedia

இந்த புதிய சுரங்கபாதையால் 46 கிலோ மீட்டர் பயண தொலைவு குறைக்கப்படுகிறது. பல சிறப்பு தன்மைகளை உடைய சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த சுரங்கப்பாதையை நாட்டிற்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் உரை நிகழ்த்தினார். இந்த சுரங்கப்பாதை திறந்து 3 நாட்கள் தான் முடிந்துள்ளது.

3 விபத்துகள்:

ஆனால், அதற்குள்ளாக 3 விபத்துகள் நிகழ்ந்துள்ளது என்று பார்டர் ரோடு ஆர்கனைசேசன் தலைமை பொறியாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி அவர் கூறுகையில் “கடந்த 3 ஆம் தேதி பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது குறித்து அக்டோபர் 3 ஆம் தேதியே உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட 3 விபத்துகள் 3 நாட்களுக்குள் நடந்துள்ளது. இதற்கு வாகன ஓட்டிகளின் அலட்சியம் தான் காரணம். பலர் சுரங்கப்பாதை உள்நின்று செல்பி எடுத்துள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது”

பண்டிகை கால வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதார அமைச்சகம் வெளியீடு!!

“சாலையின் நடுப்பகுதியில் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டது கேமராவில் பதிவாகியுள்ளது. சுரங்கப்பாதை இருவழி பாதையாக உள்ளதால் முந்தி செல்ல முடியாது. அப்படி முயற்சித்து தான் விபத்துகள் நடந்து உள்ளது. சுரங்கப்பாதை பாரம்பரிப்பு பணிக்காக தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 2 மணி நேரங்கள் மூடப்படுகின்றன” என்று தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -