வெண்பாவின் முகத்திரையை கிழிக்கும் அகிலன் – வசமாக சிக்கிக் கொள்ளும் வெண்பா!!

0

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் எப்பொழுது சேருவார்கள்? பாரதிக்கு வெண்பா பற்றிய உண்மை எப்பொழுது தெரிய வரும்? என்று மக்கள் பலரும் ஆவலுடன்  எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்றைய எபிசோடில் வெண்பா மீது அகிலனுக்கு சந்தேகம் எழுகிறது.

பாரதி கண்ணம்மா

நேற்றைய எபிசோடில் சௌந்தர்யா வருணை பார்த்து விசாரிக்கிறார். வருண் இதுவரையிலும் தனக்கும் கண்ணம்மாவிற்கும் இடையே இருக்கும் உறவை விளக்கி கூறுகிறார். மேலும் கண்ணம்மா அவருக்கு சகோதரன் என்று வாழ்த்து எழுதிய டைரியையும் சௌந்தர்யாவிடம் காட்டுகிறார். மேலும் சௌந்தர்யாவிற்கும் வேணுவுக்கும் இதையும் தாண்டி எதோ பிரச்சனை உள்ளது என்பது கொஞ்சம் தெளிவாகிறது. அதன் பிறகு பெட்ரோல் பங்கிற்கு வரும் சௌதர்யாவை கண்ணம்மா பார்த்து ஒளிந்து கொள்கிறார். இதோடு நேற்றைய எபிசோட் முடிவடைந்தது.

bharathi kannama (1)
bharathi kannama (1)

இன்று பாரதி ஹாஸ்பிடலில் செய்த ரகளையால் பாரதியின் டாக்டர் வேலை பறிபோகிறது. வீட்டில் அனைவரும் சுற்றி நின்று அவரை கேள்வி கேட்கின்றனர். ஆனால் பாரதி தனக்கு வாழ்க்கையே போய்விட்டது. இது சாதாரண வேலை தானே என்று கூறுகிறார். இதனால் அனைவரும் ஆத்திரம் அடைகின்றனர்.

அகிலனும் பாரதியை திட்டி தீர்க்கிறார். கடைசியாக சௌந்தர்யா மறுபடியும் டெஸ்ட் எடுக்கலாம் என்று கூறுகிறார். இதற்கு பாரதியும் சம்மதிக்கிறார். சௌந்தர்யா ஒரு பெரிய ஹாஸ்பிடலில் அப்பாய்ன்மெண்ட் வாங்கி வைக்கிறார். அதன் பிறகு பாரதி கிளம்ப தயாராகும் போது வெண்பா கால் செய்து அவருக்கு வேலை பறிபோனதை பற்றி கூறுகிறார். பாரதிக்கு தான் இது ஏற்கனவே தெரியுமே.

bhrathi kannama (1)
bhrathi kannama (1)

பாரதி இப்பொழுது தனக்கு டெஸ்ட் எடுக்க போவதாக கூறுகிறார். இதனால் ஷாக் ஆன வெண்பா பதறி அடித்து வீட்டிற்கு வருகிறார். அனைவரும் வெண்பா எதற்கு இங்கு வந்தார் என்று பார்க்கின்றனர். டெஸ்ட் எடுக்க கிளம்பும் பாரதியை நிறுத்தி எதனை தடவை அவருக்கு டெஸ்ட் எடுப்பீங்க? அவன் என்ன ஆடா, மாடா? அவனை எதுக்கு இப்படி ட்ரீட் பண்றிங்க என்று கேட்கிறார்.

bharathi kannama
bharathi kannama

இதனால் வீட்டில் உள்ள அனைவரும் கடுப்பாகி உன்னை யார் இங்க வர சொன்னது? எதற்கு தேவை இல்லாம எங்க குடும்ப விஷயத்தில் தலையிடுற? என்று வெண்பாவை திட்டுகின்றனர். இதனால் பாரதியும் டெஸ்ட் எடுக்க மறுக்கிறார். அடுத்ததாக அகிலனுக்கு வெண்பா மீது சந்தேகம் எழுகிறது. சௌந்தர்யாவிடம் அகிலன் சென்று வெண்பா மீது தனக்கு இருக்கும் சந்தேகத்தை கூறுகிறார். நமக்கு முன்பே இப்படி பேசும் வெண்பா நாம் இல்லாதபோது எப்படி எல்லாம் பேசுவாள்.

akilan
akilan

அவளை இனிமேல் வீட்டிற்குள் விடக் கூடாது என அகிலன் கூறுகிறார். இதிலிருந்து அகிலன் தான் வெண்பாவை பற்றிய அனைத்து உண்மையும் கண்டுபிடிப்பார் என்று தோன்றுகிறது. ஏனெனில் கண்ணம்மாவை கொல்ல யாரோ முயற்சிப்பதாக கண்டிபிடித்ததே அகிலன் தான். எனவே கூடிய விரைவில் வெண்பா பற்றிய அனைத்து உண்மையும் தெரிய வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here