உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை செய்த பின்னர், மீண்டும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம், கடந்த 10 வருடமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தது, அதன்படி இந்நிறுவனம் குணப்படுத்துவதற்கான மாத்திரை தயாராகி விட்டதாக, தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த மாத்திரை நோயாளிகளுக்கு, இரண்டாவது முறையாக புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதோடு, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு ஆகிய சிகிச்சையின் பக்க விளைவுகளை 50 சதவீதம் குறைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதலுக்காக மாத்திரை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் அனைத்து மருந்து கடைகளிலும் 100 ரூபாய்க்கு, இந்த மாத்திரை கிடைக்கும் என்பதை பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.