தமிழக அரசு பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சமீப நாட்களாக பேருந்துகளில் UPI மூலம் பயணச்சீட்டு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். மேலும் இதற்கான சோதனை ஓட்டமும் பல பேருந்துகளில் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் BS-VI பேருந்து சேவையை அமைச்சர் உதயநிதி மற்றும் சிவசங்கர் தொடங்கி வைத்தனர். மேலும் டெபிட் மற்றும் UPI மூலம் பயண டிக்கெட் பெற வசதியாக மின்னணு டிக்கெட் இயந்திரத்தையும் நடத்துனர்களிடம் வழங்கினார். தற்போது சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மட்டும் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் இன்னும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.