மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

0
Gold
Gold

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று 2வது நாளாக குறைந்து உள்ளது சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த மக்களை சற்று மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

வரலாறு காணாத உயர்வு:

கொரோனா பாதிப்பு உயிரிழப்புகளை விட அதிகளவில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல தொழில் துறைகள் மிகப்பெரிய நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் முதலீட்டாளர்கள் கவனம் பாதுகாப்பான முதலீடுகள் மீது செல்லத் தொடங்கியது. இதன் விளைவாக தங்கத்தை குறிவைத்தனர் முதலீட்டாளர்கள். இதனால் தங்கத்தின் விலை கிடுகிடுவென வரலாறு காணாத அளவிற்கு உயரத் தொடங்கியது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த பொதுமக்கள் நகை வாங்குவதற்கு தனியாக லோன் தான் வாங்க வேண்டும் என கவலையில் மூழ்கினர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

gold-purchase
gold-purchase

ஆம், அந்த அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. கடந்த ஜூலை 20ம் தேதி சவரன் 37 ஆயிரம் ரூபாயாக இருந்த ஆபரணத் தங்கம், ஆகஸ்ட் நிலவரப்படி 43 ஆயிரத்தை தொட்டது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி சவரன் 288 ரூபாய் குறைந்தது தங்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றம் இல்லை. இந்நிலையில் இன்றும் தொடர்ந்து 2வது நாளாக தங்கத்தின் விலை குறைந்து உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் – பிரதமர் வலியுறுத்தல்!!

இன்று சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் 23 ரூபாய் குறைந்து ரூ.5,358 க்கும், ஒரு சவரன் ரூ.184 குறைந்து 42,864 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.82.63 க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here