சென்னையில் கடந்த ஒரு வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 424 ரூபாய் குறைந்து உள்ளது.
தங்கத்தின் விலை:
கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் துறையில் ஏற்பட்ட சரிவால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் விலையும் தொடர்ந்து புதிய உச்சத்திற்கு சென்றது. இதுவரை வரலாறு காணாத அளவில் ஒரு சவரன் 43 ஆயிரம் ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஊரடங்கு காலத்தில் குறைந்த செலவில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தவர்கள் நகை விலையைக் கேட்டு கவலையில் ஆழ்ந்தனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் செப்.,7 முதல் பேருந்து, பயணியர் ரயில் சேவைகளுக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு!!
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவுப் பாதையில் தங்க விலை செல்வது பொதுமக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 53 ரூபாய் குறைந்து ரூ.4,911-க்கும், ஒரு சவரன் 424 ரூபாய் குறைந்து 39,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 1.80 ரூபாய் சரிந்து 74.90 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 74,900 ஆக உள்ளது.