ஆதார் கார்டு இல்லையென்றால் சம்பளத்தில் 20% அபராதம் – வருமானவரித்துறை புது உத்தரவு..!

0

இந்தியாவில் ஊதியம் பெரும் ஊழியர்களிடம் பிடிக்கப்படும் டிடிஎஸ் (TDS) கணக்கில் பான் அல்லது ஆதார் கார்டை இணைக்கா விட்டால் 20% வரி பிடிக்கப்படும் என வருமானவரித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வருமானவரித்துறை இந்தியாவில் ஊதியம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் (TDS) ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்கிறது. இதனை ஊழியர்கள் நிதியாண்டு நிறைவு பெற்றவுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதற்கு சில வரிச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த டிடிஎஸ் கணக்கில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது பான் எண் அல்லது ஆதார் என்ணை இணைத்து கொள்வது கட்டாயமான ஒன்றாகும்.

ஆனால் தற்போது வருமான வரித் துறையின் கீழ் செயல்படும் நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆதார் மற்றும் பான் கார்டு என இரண்டையும் இணைப்பது கட்டாயமான ஒன்றாகும். இவ்வாறு இணைக்காதவர்களுக்கு 20% வரி அவர்களின் சம்பளத்தில் இருந்து அபராதமாக பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here