பொதுமக்கள் 2 அல்லது 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று பொருட்கள் வாங்கும் அளவிற்கு நியாயவிலை கடைகள் அமைந்துள்ள இடங்களில் விரைவில் நடமாடும் நியாயவிலை கடைகள் ஏற்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யும் கூட்டுறவு சில்லரை விற்பனை நிலைய துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டுபேசினார். அதில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு ஆகிய 3 இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையம் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 123 கூட்டுறவு வங்கி கிளைகள் திறக்கப்பட்ட நிலையில், 3.46 லட்சம் பேருக்கு பண்ணைசாரா கடனாக ரூ.24ஆயிரம் கோடி குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 1,962 நியாய விலைக் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் நியாய விலைக் கடைகளுக்கு 2 அல்லது 3 கி.மீட்டா் தொலைவுக்கு நடந்து சென்று பொருள்கள் வாங்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு உள்ளது அதுபோன்ற இடங்களில், நடமாடும் நியாய விலைக் கடைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |