தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
184 வாக்குகள்!! எட்டாவது முறை!! ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினராக இந்தியா தேர்வு..!
மேலும் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்கள் நிர்ணயம் செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளதாகவும் அது விரைந்து முடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 12ம் வகுப்பிற்கு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் அவர்கள் முடிவுகளை எடுப்பார் எனவும் அமைச்சர் கூறினார்.