கொரோனா தற்போது நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து போய் உள்ளனர். மேலும் 12 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பி பெற சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. மார்ச் 16 பிறகு விலையை மாற்றி அமைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ் சென்றது. மேலும் அதன் பலனை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கவில்லை. அதனை தொடர்ந்து ஊரடங்கு காரணத்தால் அரசுக்கு ஏற்பட்ட வருவாயை ஈடுகட்ட மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு 10, டீசலுக்கு 13 என கலால் வரியை உயர்த்தியது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மேலும் மாநிலங்கள் வாட் வரியை உயர்த்தியது. இதனை தொடர்ந்து 82 நாட்கள் கழித்து இந்த மாத 7 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் டீசல் விலையை படிப்படியாக உயர்த்தியது. தற்போது 12வைத்து நாளாக பேட்ரோல் டீசல் விலையை 12 வது நாளாக உயர்த்தியுள்ளது. 12-வது நாளாக பெட்ரோல் 46 காசு உயர்ந்து 81.32 ஆகவும், டீசல் 54 காசு உயர்ந்து 74.23 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 நாளில் பெட்ரோல் லிட்டருக்கு 5.77, டீசல் லிட்டருக்கு 5.47 அதிகரித்துள்ளது.