கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொது தேர்விற்கான முடிவுகள் ஜூலை 6 ஆம் தேதி வெளியிடபடும் என்று எதிர்பார்க்க படுகிறது.
பொது தேர்வு:
கடந்த மார்ச் 24 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வினை எழுதினார். 8.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர். மே 27 ஆம் தேதி இந்த தேர்விற்கான திருத்தும் பணி நடைபெற ஆரம்பித்தது. இந்த பணி முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்கபட்டது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைவரும் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அடுத்ததாக, மதிப்பெண் சரிபார்க்கும் பணி மற்றும் மதிப்பெண் கணக்கீடு, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்த பணிகள் நாளை முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வரும் ஜூலை 6 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இனி தான் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிப்பார் என்றும் சொல்லபடுகிறது.
அலைச்சலை தடுக்கும் நடவடிக்கை:
தற்போது அதிகமாக கொரோனா பரவுவதால் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் நகலை பெற ஆன்லைன் மூலம் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்களே அவரவர் மதிப்பெண் நகலை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மூலமும், தாங்களே ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதலாக, மாணவர்கள் தாங்கள் பதிவு செய்து இருந்த தொலைபேசி எண்ணிற்கு “‘ரேங்க்” பட்டியல் ஏதும் இல்லாமல் அவரவர் முடிவுகள் குறுந்செய்தியாக சென்று விடும்.
தேர்வினை எழுதாத மாணவர்கள்:
இப்படியான நிலையில், கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் சில மாணவர்கள் தேர்வினை எழுதாமல் இருந்தனர்.
இவர்களுக்கும், தேர்வினை மறுபடியும் எழுத நினைக்கும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்கபட்டு உள்ளது எனவும், ஏற்கனவே எழுதிய பாடங்களுக்கு மட்டும் முடிவுகள் வழங்கபடும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.