1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி இயக்கத்தை அறிவித்த ஜொமாடோ.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்:
ஜொமாடோவில் முன்னணி ஊழியர்கள் மற்றும் ஊழியர்களில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இலவச மற்றும் பாதுகாப்பான தடுப்பூசி இயக்கத்தை ஜொமாடோ அறிவித்தது. ஆயிரக்கணக்கான விநியோக ஊழியர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் தெரிவித்தார்.
ஆன்லைன் உணவு விற்பனை செய்யும் தளமான ஜொமாடோ; தனது கம்பெனியில் வேலை செய்யும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்காக வசதி செய்து வருவதாக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தீபீந்தர் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்; கடந்த வாரம், நாங்கள் எங்கள் விநியோக ஊழியர்களுக்கு என்.சி.ஆரில் தடுப்பூசி போட ஆரம்பித்தோம். அதுமட்டுமல்லாமல் எங்கள் முன்னணி ஊழியர்கள் மற்றும் ஊழியர்களில் 150,000 க்கும் அதிகமானவர்களுக்கு இலவச மற்றும் பாதுகாப்பான தடுப்பூசி இயக்கத்தை நாங்கள் ஆரம்பித்துளோம். மேலும் எங்கள் விநியோக ஊழியர்களில் ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் ”என்று கோயல் ட்வீட் செய்துள்ளார்.
Instagram => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!