விஜய் ஹசாரே டிராபி 2023 தொடரில் இன்று (டிசம்பர் 11) கால் இறுதி போட்டி ஒன்றில் ஹரியானா, பெங்கால் அணிகள் விளையாடினர். இப்போட்டியில், டாஸ் வென்ற ஹரியானா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பெங்கால் அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு விளையாடிய ஹரியானா அணி 226 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
முன்னதாக இப்போட்டியில் ஹரியானா அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் 10 ஓவர்கள் வீசி, வெறும் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை சாய்த்தார். தொடர்ந்து ஜொலித்து வரும் சாஹல் விரைவில் இந்திய அணியின் நிரந்தர சுழற் பந்துவீச்சாளராக இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் சாஹல், அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், ODI உலகக் கோப்பையில் இடம்பெற தவறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்டைலில் களமிறங்க காத்திருக்கும் ஷமி.. வைரலாகும் போட்டோ சூட் PIC!!