விஷம் குடித்த இளைஞன்., அடக்கத்திற்கு தயாரான குடும்பத்தினர்., தலையை ஆட்டிய பொணம்? நடந்தது என்ன?

0
அடக்கத்திற்கு தயாரான குடும்பத்தினர் தலையை ஆட்டிய பொணம்
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் சில காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளைஞர் ஒரு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொன்னம் பட்டியைச் சேர்ந்த ஆண்டிநாயக்கர் என்ற இளைஞர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி அவரை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால்,அந்த இளைஞர் இறந்துவிட்டார் எண்ணி குடும்பத்தார் முதல் அக்கம் பக்கத்தினர் வரை தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தனர். அடக்கம் செய்யும் ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில், இறந்ததாக கூறிய இளைஞர் தனது தலையை ஆட்டி குடும்பத்தை அழைத்துள்ளார்.இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து துக்க வீட்டுக்கு வந்த காவல்துறை அந்த இளைஞனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here