தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தற்போது தனது காலில் அடிபட்டதற்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கிரிக்கெட் வீரர் நடராஜன்
தமிழகத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு வீரராக தற்போது ஜொலித்து வருபவர் தான், நடராஜன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவர் முதன் முதலாக தமிழ்நாடு அணிக்காக விளையாட ஆரம்பித்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பிறந்து வந்தாலும், நடராஜன் தனது கனவு கிரிக்கெட் தான் என்று தெரிந்து கொண்டு கடுமையாக உழைத்து ஐபில் தொடர்களில் விளையாட துவங்கினார்.
பாக்கியலட்சுமி சீரியலால் கோபிக்கு நடந்த சோகம் – அவரே வெளியிட்ட பதிவு!!
இவர் ஹைதெராபாத் அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வந்தார். பின், இவருக்கு ஆஸ்திரேலியாவுடன் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டார் நடராஜன். அவர் விளையாட ஆரம்பித்த முதல் ஒவேரிலேயே விக்கெட் கைப்பற்றினார். பின், இந்திய அணியின் வெற்றிக்கும் துணை நின்றார். ஒரே நாளில் இவர் கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தினை ஈர்த்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியாக இருக்க, இந்த ஆண்டு இவர் நடைபெற்று வரும் ஐபில் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் இந்த போட்டிகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து இன்று இதற்காக அறுவை சிகிச்சையினை அவர் மேற்கொண்டார். தனக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிசிசிஐ அமைப்பிற்கும் தனது நன்றியை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். கூடிய விரைவில் அவரது உடல் நலம் பெற ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.