மௌன ராகம் 2 – ‘இந்த பாட்டை நான் சக்திக்கு தானே சொல்லி கொடுத்தேன்’ – விடியோவை பார்த்து சந்தேகிக்கும் கார்த்தி!!

0

மௌன ராகம் சீரியலில் ஸ்ருதி சக்தி பாடிய பாட்டை கார்த்தியிடம் காட்ட அதனை பார்த்து இது தன் மகளாக இருக்குமோ?? என்ற சந்தேகம் வருகிறது. மேலும் மல்லிகா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டுள்ளார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. சக்தி தன் அம்மாவிற்காக பாட்டு பாடி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து பலரும் அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர். அதே போல தருணம் ஹாஸ்பிடலுக்கு வந்து சக்தியிடம் தான் பணம் கொடுப்பதாகவும் கெஞ்சுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் சக்தி அவரை பொருட்டாகவே மதிக்கவில்லை. தயவு செஞ்சு நீங்க இங்க இருக்காதீங்க என்றும் சொல்கிறார். இதனால் தருண் வருத்தமாக சென்று விடுகிறார். அடுத்ததாக கார்த்திக் அந்த பாடலை கேட்டதும் ஷாக்காகிறார். அதாவது இதனை எங்கேயோ கேட்டது போலவே இருக்கிறதே. சக்தி பாடிய பாட்டா, இல்லை சக்திக்கு நான் சொல்லி கொடுத்த பாட்டா என்றும் யோசித்து கொண்டுள்ளார்.

இதனால் கோவமடையும் காதம்பரி சக்தியை நீங்க தான் வேணும்னே சத்யானு பெயரை மாற்றி கூட்டிட்டு வந்து இருக்கீங்களா?? என்றும் கேட்கிறார். கார்த்திக்கு இது மிகவும் குழப்பமாக உள்ளது. அடுத்ததாக ஷீலா மனோகர் குடும்பத்தை எப்படி கெடுப்பது என்றும் யோசித்துக்கொண்டுள்ளார்.

கிராமத்து ஸ்டைலில் “மட்டன் கோலா உருண்டை” – ட்ரை பண்ணி அசத்துங்க!!

என்னை என் புருஷன் கூட நிம்மதியா வாழ விட்டிங்களா?? தருணுக்கு மாத்திரையே தராமல் வெறும் சத்து மாத்திரையை கொடுத்துட்டு இருக்கேன் என்று கொலைவெறியுடன் திட்டம் போட்டுகொண்டுள்ளார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here