பாக்கியலட்சுமி சீரியலால் கோபிக்கு நடந்த சோகம் – அவரே வெளியிட்ட பதிவு!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியாக நடித்து வரும் நடிகர் சதிஷ் தற்போது ஒரு விடீயோவினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த வீடியோ பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

“பாக்கியலட்சுமி” சீரியல்

விஜய் டிவியில் தற்போது மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாக்கியலட்சுமி”. இந்த சீரியலில் ஒரு சராசரி பெண்ணின் ஆசைகள் மற்றும் கனவுகள் எவ்வாறாக இருக்கும் என்பதை அழகாக எடுத்து காட்டி இருப்பர். இப்படியாக இருக்க, அந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரமாக நடித்து வருபவர் தான், நடிகர் சதிஷ். இவர் அந்த சீரியலில் பாக்கியலட்சுமிக்கு கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எதிர்மறையான கதாபாத்திரத்தில் தான் இவர் நடித்து வருகிறார். ஒரு சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தால் அவர்களை சிலர் கண்டபடி பேசுவது வழக்கம்.

கிராமத்து ஸ்டைலில் “மட்டன் கோலா உருண்டை” – ட்ரை பண்ணி அசத்துங்க!!

அதே போல் தான் சிலர் இவருக்கு மிகவும் வக்கிரமான செய்திகளை அனுப்பி உள்ளனர். காரணம், தற்போது சீரியலில் அவர் பாக்கியாவிற்கு உறுதுணையாக இல்லாமல் தனது காதலிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அந்த மெசேஜ்களை பார்த்து கடுப்பான சதிஷ் ஒரு விடீயோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தொடர்ந்து சில நாட்களாக தனது குரலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்த காரணத்தை விளக்கியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது இவரது கோபி கதாபாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுப்பவருக்கு கொரோனா பாதிப்பு உள்ள காரணத்தால் தான் சீரியலிலும் குரல் வேறு மாதிரியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதே போல், தான் நடிப்பது ஒரு சீரியல் தான் என்றும், இனி தன்னை கோபியாக நினைத்து கொண்டு யாரும் மெசேஜ் செய்ய வேண்டாம் என்றும் வேண்டி உள்ளார். அதே போல் இந்த கடுமையான காலங்களில் தனக்கு ஆதரவு தந்து வரும் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here