நோட்டா, ஜாம்பிஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சற்று விளையாட்டுத் தனமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல கேமில் கவனம் செலுத்தினார்.
இதனால் யாஷிகா அந்த நிகழ்ச்சியின் இறுதி வாரம் வரை தாக்குப்பிடித்தார். பின்னர் இவர் எலிமினேட் செய்யப்பட்டாலும் மூக்குத்தி அம்மன், இவன்தான் உத்தமன் ஆகிய படங்களில் நடித்தார். சென்ற ஆண்டு இவருக்கு மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
6 மாதங்கள் கழித்து தற்போது தான் அதிலிருந்து மறுபடியும் மீண்டு வந்துள்ளார். இதனால் பல போட்டோஷூட் ரீல்ஸ் என வெளியிட்ட வண்ணம் உள்ளார். இவர் வெளியீட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.