சன் டிவியில் பூவே உனக்காக சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ராதிகா ப்ரீத்தி, மீண்டும் சன் டிவியில் ஒரு புதிய சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மீண்டும் ரீ என்ட்ரி:
கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ராஜா லவ் ராஜா என்ற படத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. 2019 ஆம் ஆண்டு, வெளியான எம்பிரான் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சீரியலில் இருந்து இவர் பாதியில் வெளியேறினார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு, ஒரு சில பட வாய்ப்புகள் வர தொடங்கியது. தற்போது இவர் மீண்டும், சன் டிவிக்கு என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விரைவில் சன் டிவியில் துவங்க உள்ள புத்தம் புதிய சீரியலில் இவர் ரீ என்ட்ரி கொடுப்பார் என பேசப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இவரது ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.