கோலிவுட்டில் ஜாம்பி, மூக்குத்தி அம்மன், நோட்டா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சியப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். தன் பட சான்ஸ்களை அதிகரிப்பதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார்.
குறிப்பாக அந்நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களையும் தனக்காக சம்பாரித்தார் யாஷிகா ஆனந்த். கிட்டத்தட்ட 34 ஆயிரம் லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள இவர் அடிக்கடி தன்னைப் பற்றிய பதிவுகளை போட்டு வருவார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், இவர் தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு, எப்படியும் அந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.