ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன யாஷிகா – ரசிகர்கள் ஷாக்!!

0
yashika anand

பிக் பாஸில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்தவர் யாஷிகா ஆனந்த். இவருக்கு தற்போது 21 வயது ஆன நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறியுள்ளார். அதனை தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த்

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இந்த படத்தின் மூலம் பல ரசிகர்களை தன் வசம் இழுத்தார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மும்பையில் பிறந்த இவருக்கு சினிமாவில் அறிமுகமான போது 19 வயது தான்.

yashika anand
yashika anand

அதன் பிறகு அவருக்கு பிக் பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இதில் கலந்து கொண்டு பல டாஸ்க்குகளில் வெற்றியும் பெற்றார். மேலும் பிக் பாஸ் வீட்டில் மகத் உடன் ஏற்பட்ட காதலால் பல சர்ச்சைகளில் சிக்கினார் யாஷிகா.

yashika anand
yashika anand

அதன் பிறகு மகத் விலகி செல்லவே இவருக்கு பெரிய ஏமாற்றமே நிகழ்ந்தது. மேலும் நல்ல பக்குவம் உள்ள பெண்ணாகவும் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டார். இவரும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து செய்த செயல்களும் மக்களை எரிச்சலடைய செய்தது. இதனால் இவர்களுக்கு எதிராகவே மக்கள் இருந்தனர்.

yashika
yashika

யாஷிகா பிக் பாஸில் ஜெயிக்கவில்லை என்றாலும் போட்டியில் வெற்றி பெற்றதற்காக பரிசு தொகையை பெற்றுச் சென்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய யாஷிகாவிற்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நடித்தார்.

View this post on Instagram

Chop chop ✂️ ? xD Outfit @naushinkiran

A post shared by Y A S H ⭐️?? (@yashikaaannand) on

மேலும் ஜாம்பி படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து கவர்ச்சிகரமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் யாஷிகா. தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு பாப் கட்டிங் உடன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here