என்னால் 5 மாதங்கள் வரை எழுந்திரிக்க முடியாது, உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் – யாஷிகாவின் கண்ணீர் பதிவு!!

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்த யாஷிகா ஆனந்த் தற்போது விபத்தால் உயிருக்கு போராடி வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தின் மூலம் பிரபலமான யாசிக்க ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஆனால் அவர் நினைத்த அளவிற்கு படம் ஹிட் கொடுக்கவில்லை.

yashika
yashika

இதனால் தனது அனைத்து முயற்சிகளை போட்டு வந்தார். இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். பல முயற்சிகளுக்கு பிறகு தற்போது முன்னேறியுள்ள யாஷிகாவிற்கு வந்த பரிதாப நிலை பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. விபத்தில் யாஷிகா உயிர் பிழைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டி வந்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவரது தோழி பவானி உயிரிழந்தார். யாஷிகா தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு ஓரளவிற்கு தேறி வந்தார். அவர் கண் முழித்த செய்தியை கேட்டு தான் பலரும் சந்தோசத்தில் இருந்தனர். ஆனால் தற்போது யாஷிகாவே ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது தனக்காக வேண்டிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

தனது வலது கால் நடக்க முடியாமல் இருப்பதாகவும், 5 மாதங்கள் வரை தன்னால் நடக்க முடியாது, அசைய முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் தனது படுக்கையை விட்டி எழுந்திருக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், பாத்ரூம் கூட அதே இடத்தில் தான் என்று கூறியுள்ளார். இந்த பதிவு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. மேலும் தன் முகத்திற்கு எதுவும் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார். இது தனக்கு ஒரு மறுபிறவி என்றும் கூறியுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ⭐️?? (@yashikaaannand)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here