காவியா, விஜய் டிவியின் சீரியல் மூலம் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து உள்ளவர். இவர் தனது சோசியல் மீடியா பக்கங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பட்டு புடவையில் தலை நிறைய மல்லிகை பூ உடன் ஒரு தேவதையாக காட்சி தருகிறார். அந்த புகைப்படத்தில் உள்ள அவரின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் மிக பிரபலமான ஒன்று. இந்த சீரியல் பாசப்பிணைப்பில் உருவான ஒரு கூட்டு குடும்பத்தின் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் தற்போதைய கதையாக வீட்டின் கடைசி தம்பி கண்ணனும் அவர் காதலிக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொள்ள போவது போல் கதை நகர்கிறது.இவ்வாறு நொடிக்கு நொடிக்கு பரபரப்புடன் பல திருப்பங்களை கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியலில் வீட்டின் மூன்றாவது மருமகளாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா.
இது சேலையா?? கண்ணாடியா?? அலைகளுக்கு மத்தியில் கவர்ச்சி கன்னியாக போஸ் கொடுத்த சாக்ஷி!!!
சோசியல் மீடியாவில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இன்ஸ்டா பக்கத்தில் தழைய தழைய பட்டு புடவையில் தலையில் மல்லிகை பூ உடன் உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்கி விழ செய்து உள்ளது.மேலும் சிலர் தங்களின் கவிதையால் அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்