விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தற்போது முத்தரசனை கொன்றது யார் என்ற உண்மை கசிந்துள்ளது. இதனை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.
நாம் இருவர் நமக்கு இருவர்
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஐஸ்வர்யாவை தவறாக வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டி கொண்டிருந்தார் முத்தரசு. இதனால் பல பிரச்சனைகளும் ஏற்பட்டது. கடைசியில் முத்தரசு கொல்லப்பட்டார்.
மேலும் ஐஸ்வர்யா கையில் முத்தரசனின் மொபைலும் சிக்கியது. ஆனால் யார் கொலையாளி என்ற கேள்வி மட்டும் அனைவருக்குமே இருந்தது. இதனால் சீரியலும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தான் மகாவும் கத்தியும் அந்த போனை எடுத்து வந்தது என்ற உண்மை தெரிய வந்தது.
தற்போது இன்றைக்கு வெளியான எபிசோடில் கூட மாயன் துப்பாக்கியை வைத்து முத்தரசனை மிரட்டி கொண்டிருந்தார். ஆனால் அவர் கொலை செய்யவில்லை என்று மட்டும் தெரிகிறது. இந்நிலையில் முத்தரசனை கொலை செய்தது காயத்ரி தான் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுவும் எபிசோடு கேப்சன் உடன் வெளியாகியுள்ளது. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த காயத்ரி தான் இந்த வேலையை செய்தாரா?? என்றும் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்