தமிழ் சினிமாவில் வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் கலக்கி வருகின்றனர். அழகிலும் சரி கவர்ச்சியிலும் சரி வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு போட்டியாக வலம் வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கு தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் வில்லியான சைத்ரா ரெட்டி தற்போது போட்டோஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சைத்ரா ரெட்டி
கர்நாடகாவில் பிறந்த சைத்ரா ரெட்டிக்கு சொந்த ஊர் ஆந்திரபிரதேசம் தானாம். இவர் தனது சினிமா பயணத்தை 2014 இல் கன்னட சீரியலில் தொடங்கியுள்ளார். இவர் பிரபல ஹிந்தி சோவின் கன்னட ரீமேக்கிலும் நடித்துள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
மேலும் டிக்டாக் மூலம் பிரபலமான சைத்ராவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். விஜய் டிவியில் பிரபலமான சீரியலான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் பிரியா பவானி ஷங்கருக்கு பதிலாக நடித்திருந்தார்.
ஆனால் அந்த சீரியல் அவருக்கு அந்த அளவுக்கு பெரிய வாய்ப்பாக அமையவில்லை. பிறகு பல முயற்சிக்கு பின் ஜீ தமிழில் 2017 இல் உருவாக்கப்பட்ட யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார்.
ஆரம்பத்தில் அசால்ட்டாக எடுத்துக்கொள்ளப்பட்ட இவரின் கதாபாத்திரம் வெள்ளித்திரையில் இருக்கும் வில்லிகள் ரேஞ்சுக்கு இருந்தது. படிப்படியாக இவரின் திறனால் மக்கள் மனதை கொள்ளைகொண்டார்.
மேலும் 2018 ஜீ குடும்ப விருந்துகளில் Favourite வில்லி என்ற அவார்டையும் கைப்பற்றினார். தற்போது இவர் போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.