சாத்தான்குளம் சம்பவம் போல் மீண்டும் மதுரையில் கல்லூரி படிக்கும் இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதல் திருமணம்:
மதுரையில் உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான், விவசாயி கன்னியப்பன். அவருக்கு இதயக்கனி மற்றும் ரமேஷ் என இரு மகன்கள் உள்ளனர். இதயக்கனி கடந்த சில வருடங்களாக புனிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் அவரது பெற்றோர்கள் சம்மதம் இன்றி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் புனிதாவின் பெற்றோர் சாப்டூர் காவல் நிலையத்தில் தங்கள் பெண்ணை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் புனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். இதனை விசாரிக்க போலீசார் இதயக்கனி வீட்டிற்கு சென்று பார்க்கையில் அவரது தம்பியான ரமேஷ் மட்டும் தான் வீட்டில் இருந்துள்ளார். போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர், ஆனால், அவர் சரியாக பதில் சொல்லாத காரணத்தால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். நேற்று மாலை 6 மணி அளவில் அழைத்து சென்ற போலீசார் அவரை வீட்டிற்கு அனுப்பவில்லை.
பிணமாக தொங்கிய ரமேஷ்:
இப்படியாக இருக்க இன்று காலை கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள மலைப்பகுதி அருகே இருந்த மரத்தில் பிணமாக ரமேஷின் சடலம் தொங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரமேஷை போலீசார் தான் கொலை செய்துள்ளனர் என்று கூறி சடலத்தை அப்புறபடுத்த விட மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
ரேஷன் கடைகளுக்கு இந்த 3 நாட்கள் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!
பின், பேரையூர் டிஎஸ்பி மதியழகன் சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் மற்றும் காவலர் புதியராஜா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாத்தான்குளம் விவகாரம் போல் இதுவும் இருப்பதால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைத்துள்ளனர்.