இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் கடந்த 2 மாதங்களாக ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தொடரில் முடிந்த பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தயாராகுவார்கள் என பிசிசிஐ முன்பே அறிவித்திருந்தது. இதன்படி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற தவறிய அணிகளில் உள்ள இந்திய வீரர்கள் ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கொண்ட ஒரு குழு இங்கிலாந்துக்கு சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப் போட்டி சமீபத்தில் முடிவடைந்த அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தேர்வாகி உள்ள அனைத்து வீரர்களும் ஜூன் 2ம் தேதிக்குள் பயிற்சிக்காக இங்கிலாந்துக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போன போகட்டும்.., தோத்தாலும் இத நெனச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு.., ஹர்திக் பாண்டியா சொன்ன விஷயம்!!!
இவர்களுடன் இணைந்து, இந்திய அணியின் பினிஷராக திகழ்ந்த தினேஷ் கார்த்திக் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வர்ணனை குழுவில் ஒருவராக தினேஷ் கார்த்திக் இடம் பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.