தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் சுற்றுலா தளம், உறவினர் வீடு என கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் ஜூன் 7ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியுடன் இணையும் முன்னணி பினிஷர்…, வெளியான தகவல்!!
அதாவது பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி அதற்குரிய நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.