IPL 2023 தொடருக்கான இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தனர். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK அணி விளையாடி கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதி ஓவராக குறைக்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன்படி CSK அணி 15 ஓவர் முடிவில் 171 ரன்கள் குவித்து 5 வது முறையாக IPL கோப்பையை சொந்தமாக்கி கொண்டனர். இந்நிலையில் தோல்வி குறித்து குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த இறுதிப் போட்டியில் 2 வது முறையாக கோப்பையை கைப்பற்றுவோம் என நினைத்தோம்.
ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் தவறவிட்டோம். ஆனாலும் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம். எங்களால் முடிந்தவரை எல்லா முயற்சியையும் செய்தோம். என் அணியை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.