இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இது மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் நடைமுறை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
ஐடி ஊழியர்கள்:
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை தவிர அனைத்து விதமான தொழில்களும் முடங்கி உள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவிலும் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதற்காக ஐடி ஊழியர்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை வீட்டில் இருந்து பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் இது ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
80 சதவீத ஊழியர்கள்:
இது தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உலகம் முழுவதும் 80 சதவீத ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருவதாக தெரிவித்தார். இதனால் இந்தியாவிலும் வீட்டிலிருந்து பணி செய்யும் ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., ஊழியர்கள் ஜூலை 31 வரை அதை தொடர உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
மேலும் தென் மாநிலங்களைப் போன்று மற்ற மாநிலங்களும் ஆன்லைன் மருத்துவ சேவைகளை சிறப்பாக கையாள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க, பாரத் நெட் பிராட்பேண்ட் சேவையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |