தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., 4 தேங்காய் மற்றும் எண்ணெய்? பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என விவசாய சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பான திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக வேளாண் அமைச்சர் உள்ளிட்ட பலரும் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பிரச்சாரத்தின் போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 4 தேங்காய் கொடுக்கப்படுவதுடன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெயையும் வழங்க வேண்டும் என பாஜக போராடி வருகிறது என தெரிவித்துள்ளார். இம்முறை ஆட்சிக்கு வந்தால் தேங்காய் எண்ணெய் திட்டம் அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான பெஸ்ட் புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here