ஏப்ரல் 14க்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா..? மத்திய அரசு விளக்கம்..!

0

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான தொழில்களும் முடங்கி உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் பாடங்கள்:

இந்தியா முழுவதும் பல பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன. மேலும் ஏப்ரல் 14ம் தேதி உடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்துள்ளார். அவர் கூறியது,

இந்தியாவில் அமெரிக்க மக்கள்தொகையை விட அதாவது 34 கோடி மாணவர்கள் உள்ளனர். அவர்கள் எங்களின் மிகப்பெரிய சொத்து. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு, மத்திய அரசுக்கு மிகவும் முக்கியம். 14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது.

நிலவரத்தை பொறுத்து..!

ஏப்ரல் 14-ந் தேதியன்று, அப்போதைய கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்வோம். பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பதா அல்லது மேலும் சில நாட்களுக்கு மூடுவதா என்பது குறித்து 14-ந் தேதி முடிவு செய்யப்படும். ஒருவேளை, 14-ந் தேதிக்கு பிறகும் பள்ளி, கல்லூரிகளை தொடர்ந்து மூடுவதாக இருந்தால், மாணவர்களின் கல்வியாண்டில் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய முயன்று வருகிறோம். ஏற்கனவே ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

பள்ளி, கல்லூரிகள் பின்பற்றி வரும் செயல் திட்டத்தை எனது அமைச்சகம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலைமை சீரடைந்து, ஊரடங்கு விலக்கப்பட்டவுடன், நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்துவது, விடைத்தாள்கள் திருத்துவது ஆகிய பணிகளுக்கான திட்டம் தயாராக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here