முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளில் எது சிறந்த அணி என்று தெரிவித்துள்ளார்..
கொரோனவால் தள்ளிப்போன ஐபிஎல் – நடக்குமா..?
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் சர்வதேச அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் ஐபிஎல் தொடர் நடக்குமா என கேள்விக்குறியாகியுள்ளது.
எந்த டீம் கெத்து..?
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறுகையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 12 ஆண்டுகள் முடிந்துள்ளது. வெற்றி சதவீதத்தை வைத்து பார்க்கையில், சிஎஸ்கே டாப்பில் உள்ளது. ஆனால் போகப்போக மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையை அடித்து தூக்கி மேலே ஏறி வந்தது.
மும்பை அணி 4 முறை கோப்பை வென்றுள்ளது. சென்னை அணி 3 முறை கோப்பை கைப்பற்றியுள்ளது. ஆனால் குறைந்த போட்டிகளில் சென்னை அணி விளையாடியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சென்னை அணியை மிரட்டும் அணியாக மும்பை சிறந்த அணியாக உள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் நிச்சயம் கோப்பை வெல்லும் அணியாக மாறியுள்ளது. இதுவரை நடந்துள்ள ஐபிஎல் தொடர்களை பார்க்கும் போது சென்னை சிறந்த அணியாக திகழ்ந்தாலும் மும்பை அணி அதை விட ஒரு படி மேலே தான் என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |