ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு எப்படி இன்றியமையாத ஒன்றாக உள்ளதோ அதேபோன்றுதான் பான் கார்டும். இதனால் பான் கார்டை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு பலமுறை கால அவகாசம் வழங்கி வந்தது. ஆனால் இதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இன்னும் ஆதார், பான் இணைக்காதவர்களின் பான் கார்டு செயலிழக்கப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் இப்போது இந்தியாவில் வசிக்கும் சிலர் இந்த பான் கார்டை ஆதாருடன் இணைக்க தேவையில்லை என தெரிவித்துள்ளனர். அது யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
- 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணைக்கத் தேவையில்லை.
- வருமான வரி சட்டத்தின்படி குடியுரிமை இல்லாதவர்கள், இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் பான் கார்டை இணைக்க வேண்டாம்.
- ஆனால் அசாம் ஜம்மு, காஷ்மீர், மேகாலயா மாநிலங்களில் வசிப்பவர்கள் கட்டாயம் பான் ஆதாரை இணைக்க வேண்டும்.
- இது தவிர இன்னும் ஆதார் பான் கார்டு இணைக்காதவர்களின் பான் கார்டு ரத்து செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.